search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனி கொள்ளை"

    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் வீட்டில் எட்டிப் பார்த்தபோது ராமுத்தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • கம்பம் நகரில் கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் இரவு சாலையில் சுற்றிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி ரோடு சின்னவாய்க்கால் தெருவைச் சேர்ந்த மணிமுத்து மனைவி ராமுத்தாய் (வயது 80). கணவர் இறந்து விட்டதால் இவர் தனியாக வசித்து வந்தார். பேரன் போத்திராஜ் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.

    அவர் தினசரி ராமுத்தாய்க்கு உணவு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். இன்று காலை அவரது வீடு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் வீட்டில் எட்டிப் பார்த்தபோது ராமுத்தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை தாக்கி கொன்று விட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் (பொ) சிலை மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் நகரில் கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் இரவு சாலையில் சுற்றிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    மேலும் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்தும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற நபர்கள்தான் பணம் மற்றும் நகைக்காக மூதாட்டியை கொலை செய்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

    • அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(63). இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.

    பீரோவில் பார்த்தபோது 31 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). இவர் வெல்லம் வியாபாரம் பார்த்து வருகிறார். இவரது மகனும், மகளும் வெளிநாட்டில் உள்ளனர். ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று அழகாபுரிக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6.5 பவுன் தங்கநகை, 350 கிராம் வெள்ளிபொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்தும் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    • கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மோட்டார் சைக்கிள்கள், மாடுகள், வாழைத்தார்கள் போன்றவை அடிக்கடி திருடு போய் வந்தன.
    • தற்போது வீடு புகுந்து நகைகள் திருடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் 1-வது வார்டு பசும்பொன் நகரைச் சேர்ந்த சின்னச்சாமி மனைவி வனிதா (வயது 19). இவர் சொந்தமாக பால்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். தனது மகளின் திருமணத்துக்காக 7 பவுன் மதிப்பிலான நெக்லஸ் மற்றும் 10 பவுன் மதிப்பிலான காசுமாலை ஆகியவற்றை தனது வீட்டு பீரோவில் வைத்திருந்தார். சம்பவத்தன்று உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது.

    அதில் இருந்து 17 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வனிதா கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் யார்? என்பது தெரியவில்லை. வீட்டு பீரோவை மாற்று சாவி போட்டு மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5.10 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மோட்டார் சைக்கிள்கள், மாடுகள், வாழைத்தார்கள் போன்றவை அடிக்கடி திருடு போய் வந்தன.

    ஆனால் இது குறித்து கொள்ளையர்கள் யாரும் பிடிபடவில்லை. தற்போது வீடு புகுந்து நகைகள் திருடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மாவட்ட காவல் துறை உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×